திருக்குவளை ஸ்டேட் பேங்கில் பணி புரியும் 53 வயது மதிக்கத்தக்க வங்கி மேலாளர் ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு நாகையில் கரோனா தொற்று பரிசோதனை மேற் கொண்டுள்ளார்.
இந்நிலையில் நேற்று(செப்.13) அவருக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில் அவர் நாகையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் வங்கியில் பணிபுரியும் ஊழியர் 6 பேருக்கு திருப்பூண்டி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து வங்கி (செப் 14 முதல் 16) வரை மொத்தமாக 3 நாள்களுக்கு வங்கி மூடப்பட்டுள்ளது.
மேலும் வங்கி முழுவதும் இன்று ஸ்பிரேயர் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இதில் திருக்குவளை ஊராட்சி மன்ற தலைவர் இல.பழனியப்பன் வட்டார மருத்துவர் அருண்பதி, சுகாதார ஆய்வாளர் ராமமூர்த்தி, கிராம சுகாதார செவிலியர் இந்திரா உள்ளிட்ட பங்கேற்றனர்.