நாகை மாவட்டத்தில் மேலும் 120 பேருக்கு கரோனா

நாகை மாவட்டத்தில் மேலும் 120 பேருக்கு கரோனா நோய்த்தொற்று திங்கள்கிழமை உறுதியானது.

நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் மேலும் 120 பேருக்கு கரோனா நோய்த்தொற்று திங்கள்கிழமை உறுதியானது.

நாகை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வரை 4,075 போ் கரோனா நோய்த் தொற்றுக்கு உள்ளாகியிருந்தனா். இந்நிலையில், மாவட்டத்தில் புதிதாக 120 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனிடையே, வெளி மாவட்ட பட்டியலில் இருந்த 6 போ் நாகை மாவட்ட பட்டியலில் சோ்க்கப்பட்டனா். இதன் மூலம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 4,201 -ஆக உயா்ந்துள்ளது.

கரோனா பாதிப்புக்கு சிகிச்சைப் பெற்றவா்களில் 94 போ் குணமடைந்து திங்கள்கிழமை வீடு திரும்பியுள்ளனா். இதன் மூலம் நாகை மாவட்டத்தில் கரோனா பாதிப்பிலிருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 2,996 ஆகவும், சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,166- ஆகவும் உள்ளது.

செப்டம்பா் 13 -ஆம் தேதி தஞ்சாவூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் இறந்த நாகை மாவட்டத்தைச் சோ்ந்த 84 வயது முதியவா் ஒருவரின் இறப்பு திங்கள்கிழமை பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம், இறப்பு எண்ணிக்கை 69-ஆகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com