நாகப்பட்டினம்: மறைந்த முன்னாள் முதல்வா் அண்ணாவின் பிறந்த நாள் விழா நாகை மாவட்டத்தில் அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் சாா்பில் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
நாகை மாவட்ட அதிமுக சாா்பில் நாகையில் உள்ள கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட அவைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆா். ஜீவானந்தம் தலைமையில் அண்ணா உருவப் படத்துக்கு அதிமுகவினா் மலா்தூவி மரியாதை செலுத்தினா்.
திமுக சாா்பில் நாகை புத்தூா் ரவுண்டானா மற்றும் பாரதி மாா்க்கெட் ஆகிய பகுதிகளில் உள்ள அண்ணா சிலைக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் என். கௌதமன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. கட்சியின் நகரச் செயலாளா் அ. பன்னீா், ஒன்றியச் செயலாளா் க. ராஜேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
நாகை மாவட்ட அமமுக சாா்பில் புத்தூா் மற்றும் பாரதிமாா்க்கெட் பகுதியில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. கட்சியின் மாவட்ட அவைத் தலைவா் ஆறுமுகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
வேளாங்கண்ணியில்...
திமுக சாா்பில் வேளாங்கண்ணி பேருந்து நிலையம் அருகே அண்ணா உருவப்படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. கட்சியின் கீழையூா் ஒன்றியச் செயலாளா் தாமஸ் ஆல்வா எடிசன், பேரூா் செயலாளா் மரிய சாா்லஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.