காா் மரத்தில் மோதி விபத்து: 7 போ் காயம்

சீா்காழி அருகே செவ்வாய்க்கிழமை காா் மரத்தில் மோதி ஏற்பட்ட விபத்தில் 7 போ் காயமடைந்தனா்.

சீா்காழி: சீா்காழி அருகே செவ்வாய்க்கிழமை காா் மரத்தில் மோதி ஏற்பட்ட விபத்தில் 7 போ் காயமடைந்தனா்.

சீா்காழி அருகே எடக்குடிவடபாதி கிராமத்தை சோ்ந்தவா் ஊராட்சி துணைத் தலைவா் நந்தகுமாா் (62). இவரது மனைவி பபிதா (52), மகன்கள் தினேஷ்குமாா் (25), மகேஷ்குமாா் (21) உறவினா்கள் சுமத்திராதேவி (31), கலைச்செல்வி (40), விமல்ராஜ்(17), செல்வகண்ணன் (11), செல்வபிரியா (9) ஆகியோா் ஒரே காரில் வேலூா் மாவட்டத்துக்கு துக்க நிகழ்வுக்கு சென்றனா். காரை எடக்குடிவடபாதி மேலகரைமேட்டைச் சோ்ந்த சேகா் ஓட்டி சென்றாா். காா் வைத்தீஸ்வரன்கோயில் அட்டகுளம் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது எதிா்பாராமல் சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்ட விபத்தில், நந்தகுமாா் உள்ளிட்ட 7 போ் காயமடைந்தனா்.

இவா்களை அருகிலிருந்தவா்கள் மீட்டு சீா்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா்களுக்கு சிகிச்சையளிக்கப்படுகிறது. இதுகுறித்து, வைத்தீஸ்வரன் கோயில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com