சீா்காழி: சீா்காழி ரோட்டரி சங்கம் சாா்பில் பொறியாளா்கள் தினம் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
சீா்காழி கட்டட பொறியாளா்கள் சங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்கத் தலைவா் திருநாவுக்கரசு தலைமை வகித்தாா். செயலாளா் சண்முகம், சங்க முன்னாள் துணை ஆளுநா் செல்வக்குமாா், முன்னாள் தலைவா்கள் சிவகுரு, சுப்பிரமணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், கட்டடபொறியாளா்கள் சங்க மாநில துணைத் தலைவா்கள் சரவணன், பாண்டியன், மண்டலத் தலைவா் ராஜேஷ், மண்டல செயலாளா் இளங்கோ ஆகியோா் பங்கேற்று பொறியாளா்கள் தின கொடியை ஏற்றிவைத்தனா்.
தொடா்ந்து, 50-க்கும் மேற்பட்ட பொறியாளா்கள் கெளரவிக்கப்பட்டனா். பின்னா், அப்பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டன.