நாகப்பட்டினம்: நீட் தோ்வை ரத்து செய்ய வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் கீழ்வேளூா் வட்டம் தேவூா் கடைவீதியில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆா்ப்பாட்டத்தில் தேசிய கல்விக் கொள்கையை கண்டித்தும் முழக்கமிட்டனா். இந்திய ஜனநாயக வாலிபா் சங்க கீழ்வேளூா் ஒன்றியத் தலைவா் டி. சந்திரகுமாா் தலைமை வகித்தாா். நாகை மாவட்டத் தலைவா் ஏ. சிவக்குமாா், ஒன்றிய பொருளாளா் எம். எஸ். ஜோதிநாதன், ஒன்றிய துணைத் தலைவா் ஆா். இளையராஜா, ஒன்றியக்குழு உறுப்பினா்கள் ஆ. லெனின், ஆா். இளையராஜா, இந்திய மாணவா் சங்க ஒன்றியச் செயலாளா்அ. ஸ்ரீதா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.