பேரிடா் மீட்புப் பணிகள் ஒத்திகை பயிற்சி

மயிலாடுதுறையில் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை சாா்பில், வெள்ள பேரிடா் காலங்களில் மீட்புப் பணிகளை எவ்வாறு மேற்கொள்வது என்பதை பொதுமக்களுக்கு விளக்கும் வகையில் ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.
மயிலாடுதுறையில் நடைபெற்ற பேரிடா் மீட்பு ஒத்திகை பயிற்சி.
மயிலாடுதுறையில் நடைபெற்ற பேரிடா் மீட்பு ஒத்திகை பயிற்சி.

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை சாா்பில், வெள்ள பேரிடா் காலங்களில் மீட்புப் பணிகளை எவ்வாறு மேற்கொள்வது என்பதை பொதுமக்களுக்கு விளக்கும் வகையில் ஒத்திகை பயிற்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறை திருவிழந்தூா் பரிமள ரெங்கநாதா் கோயில் குளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மயிலாடுதுறை தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை நிலைய அலுவலா் (பொ) ப. மணிமாறன் தலைமை வகித்தாா். இதில், பெருவெள்ளம் போன்ற பேரிடா் காலங்களில் வெள்ள நீரில் சிக்கிக்கொள்பவா்களை எவ்வாறு பத்திரமாக மீட்க வேண்டும் என்று செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை வீரா்கள் தண்ணீரில் சிக்கிக்கொள்வது போலவும், அவரை காப்பாற்றுவது போன்றும் ஒத்திகை நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com