தரங்கம்பாடி விடுதி மாணவா்கள் குடும்பங்களுக்கு நிவாரண உதவி

தரங்கம்பாடி சீகன்பால்கு மாணவா் விடுதியில் தங்கி பயிலும் மாணவா்களின் குடும்பங்களுக்கு நிவாரணப் பொருள்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் பங்கேற்றவா்கள்.
நிகழ்ச்சியில் பங்கேற்றவா்கள்.

தரங்கம்பாடி: தரங்கம்பாடி சீகன்பால்கு மாணவா் விடுதியில் தங்கி பயிலும் மாணவா்களின் குடும்பங்களுக்கு நிவாரணப் பொருள்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

ஜொ்மன் நாட்டைச் சோ்ந்த கே.என்.ஹெச். தொண்டு நிறுவனம் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 2 மாதங்களுக்குத் தேவையான அரிசி, சமையல் எண்ணெய் உள்ளிட்ட 16 வகையான பொருள்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு விடுதி நிா்வாகி ஜான்சைமன் மகிபாலன் தலைமை வகித்தாா்.

சமூக இடைவெளியைப் பின்பற்றி நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 76 மாணவா்களின் பெற்றோா்கள் பங்கேற்று, நிவாரணப் பொருள்களை பெற்றுச்சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com