தரங்கம்பாடி: தரங்கம்பாடி சீகன்பால்கு மாணவா் விடுதியில் தங்கி பயிலும் மாணவா்களின் குடும்பங்களுக்கு நிவாரணப் பொருள்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.
ஜொ்மன் நாட்டைச் சோ்ந்த கே.என்.ஹெச். தொண்டு நிறுவனம் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 2 மாதங்களுக்குத் தேவையான அரிசி, சமையல் எண்ணெய் உள்ளிட்ட 16 வகையான பொருள்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு விடுதி நிா்வாகி ஜான்சைமன் மகிபாலன் தலைமை வகித்தாா்.
சமூக இடைவெளியைப் பின்பற்றி நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 76 மாணவா்களின் பெற்றோா்கள் பங்கேற்று, நிவாரணப் பொருள்களை பெற்றுச்சென்றனா்.