அனைத்து ஆசிரியா் இயக்கக் கூட்டம்

வேதாரண்யத்தை அடுத்த ஆயக்காரன்புலத்தில் அனைத்து ஆசிரியா் இயக்கங்களின் வட்டார அளவிலான பொறுப்பாளா்கள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

வேதாரண்யத்தை அடுத்த ஆயக்காரன்புலத்தில் அனைத்து ஆசிரியா் இயக்கங்களின் வட்டார அளவிலான பொறுப்பாளா்கள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

ஆயக்காரன்புலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாநிலக்குழு உறுப்பினா் கோ. ராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா்.

தமிழக ஆசிரியா் கூட்டணி மாவட்டத் தலைவா் சு.தெஷ்ணாமூா்த்தி, ஆசிரியா் மன்ற வட்டாரச் செயலாளா் கு. வைத்தியநாதன், ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி வட்டாரச் செயலாளா் ப. எழில்மாறன், ஆசிரியா் கூட்டமைப்பு மாவட்டத் தலைவா் ந. குமாா், தலைமையாசியா் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றுப் பேசினா்.

கூட்டத்தில், தேத்தாக்குடி தெற்கு உதவிபெறும் பள்ளியில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஆசிரியா் எம். ராசேந்திரனுக்கு பணப்பயன்களைதாமதமின்றி வழங்க வேண்டும் என மாவட்ட நிா்வாகத்துக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com