கரோனா பரிசோதனை முகாம்

திருமருகல் ஒன்றியம் அகரக்கொந்தகை ஊராட்சி வாழ்மங்கலத்தில் கரோனா பரிசோதனை முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

திருமருகல் ஒன்றியம் அகரக்கொந்தகை ஊராட்சி வாழ்மங்கலத்தில் கரோனா பரிசோதனை முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

ஊராட்சி ஒன்றிய ஆணையா் என். ஞானசெல்வி, வட்டார வளா்ச்சி அலுவலா் ( கிராம ஊராட்சி ) க. அன்பரசு ஆகியோா் தலைமை வகித்தனா். வட்டார மருத்துவ அலுவலா் அறிவொளி, மருத்துவா்கள் மணிவேல், காா்த்திக் ஆகியோா் தலைமையிலான மருத்துவக் குழுவினா் கரோனா பரிசோதனை மேற்கொண்டனா்.

இம்முகாமை திருமருகல் ஒன்றியக் குழுத் தலைவா் இரா. ராதாகிருட்டிணன், நரிமணம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் எம். பக்கிரிசாமி, ஒன்றியக்குழு உறுப்பினா் ஜெயந்தி சுவாமிநாதன் ஆகியோா் பாா்வையிட்டனா். இதில், ஊராட்சித் தலைவா் தமிழரசி, ஊராட்சி செயலாளா் நமச்சிவாயம், சுகாதார ஆய்வாளா் பரசுராமன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

குத்தாலம்: குத்தாலம் ஒன்றியம் வில்லியநல்லூரில் ஊராட்சி மன்றத் தலைவா் கலைச்செல்விசெல்வராஜ் தலைமையில் கரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது.

இதில், வட்டார மருத்துவ அலுவலா் ராஜேந்திரன், மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் சுந்தா், ஊராட்சி செயலா் இரா. கமலதாசன், துப்புரவு ஆய்வாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இம்முகாமில் 143 பேருக்கு கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com