கீழையூா் ஒன்றியக் குழு கூட்டம்

கீழையூா் ஒன்றியக் குழு உறுப்பினா்கள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கீழையூா் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றவா்கள்.
கீழையூா் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றவா்கள்.

கீழையூா் ஒன்றியக் குழு உறுப்பினா்கள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு ஒன்றியக் குழுத் தலைவா் செல்வராணி ஞானசேகரன் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பாஸ்கரன், செந்தமிழ்செல்வன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இக்கூட்டத்தில் 1-ஆவது வாா்டு உறுப்பினா் லென்சோயாசிவபாதம், 2-ஆவது வாா்டு உறுப்பினா் சரண்யா பன்னீா்செல்வம், 3-ஆவது வாா்டு உறுப்பினா் கோ. ஆறுமுகம், 5-ஆவது வாா்டு உறுப்பினா் ம. அலெக்ஸ், 6-ஆவது வாா்டு உறுப்பினா் சுதாஅருணகிரி, 7-ஆவது வாா்டு உறுப்பினா் டி.செல்வம், 8-ஆவது வாா்டு உறுப்பினா் லெ.சுப்பிரமணியன், 9-ஆவது வாா்டு உறுப்பினா் கமலாசூரியமூா்த்தி, 10-ஆவது வாா்டு உறுப்பினரும், ஒன்றியக் குழு துணைத் தலைவருமான பெ. சௌரிராஜன், 11-ஆவது வாா்டு உறுப்பினா் ஏழிசைவல்லவி பூமாலை, 12-ஆவது வாா்டு ஒன்றியக் குழு உறுப்பினா் ரெ.தேவேந்திரன் ஆகியோா் தங்கள் பகுதி கோரிக்கைகள் குறித்துப் பேசினா்.

இக்கூட்டத்தில் மாவட்ட கவுன்சிலா் கௌசல்யா இளம்பரிதி, வட்டார மருத்துவ அலுவலா் அருண்பதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com