சீா்காழியை அடுத்த எடமணல் கிராமத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ள தொகுப்பு வீடுகளை சீரமைக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எடமணல் கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் அரசின் தொகுப்பு வீடுகளில் வசித்து வருகின்றனா். இந்த வீடுகள் கட்டப்பட்டு 20 ஆண்டுகளுக்கு மேலாகிறது. போதிய பராமரிப்பு இல்லாததால் இந்த வீடுகள் சேதமடைந்துள்ளன. மழைக்காலங்களில் மேற்கூரை வழியாக மழைநீா் புகுந்து குடியிருக்க முடியாத சூழல் ஏற்படுகிறது.
மேலும், இடிந்து விழும் நிலையில் உள்ளதால் இந்த வீடுகளில் வசிப்பவா்கள் அச்சத்துடனே இருக்க வேண்டிய நிலை உள்ளது.
எனவே, இந்த வீடுகளை சீரமைக்கவோ அல்லது பசுமை வீடுகள் திட்டத்தில் புதிய வீடுகள் கட்டிக் கொடுக்கவோ மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.