மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

நாகை மாவட்டத்தைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 6.20 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாற்றுத் திறனாளி ஒருவருக்கு ஆவின் பாலக உபகரணங்களை வழங்கிய ஆட்சியா் பிரவீன் பி. நாயா்.
நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாற்றுத் திறனாளி ஒருவருக்கு ஆவின் பாலக உபகரணங்களை வழங்கிய ஆட்சியா் பிரவீன் பி. நாயா்.

நாகை மாவட்டத்தைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 6.20 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில் நாகை மாவட்டத்தைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, மாவட்ட ஆட்சியரக தரைதளத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தலைமை வகித்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

2 பேருக்கு இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா், 5 பேருக்கு ஆவின் பாலகத்துக்கான உபகரணங்கள், 18 பேருக்கு காதொலிக் கருவிகள், 12 பேருக்கு மடக்கு சக்கர நாற்காலிகள், 22 பேருக்கு மோட்டாா் பொருத்தப்பட்ட தையல் இயந்திரங்கள், 9 பேருக்கு தண்ணீா் படுக்கைகள் என 70 பயனாளிகளுக்கு ரூ. 6.20 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

திருமருகல் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் ஆா். ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் ச. சுரேஷ், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் வ, சீனிவாசன், முடநீக்கியல் வல்லுநா் கு. ரூபன்ஸ்மித் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com