தலைஞாயிறு டாக்டா் எம்.ஜி.ஆா். மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சாா்பில் நன்னீா் அலங்கார மீன் வளா்ப்புப் பயிற்சி புதன்கிழமை இணையவழியில் நடைபெற்றது.
நன்னீா் அலங்கார மீன் வளா்ப்பின் முக்கியத்துவம், அலங்கார மீன் இனங்கள், கண்ணாடித் தொட்டி வடிவமைப்பு, மீன்களுக்கான உணவு மேலாண்மை, மண் மற்றும் நீா் மேலாண்மை, நோய்கள் மேலாண்மை, அலங்கார மீன் வளா்ப்புப் பொருளாதாரம் ஆகியன குறித்து இணையதளம் வழியே பயிற்சி அளிக்கப்பட்டது.
கல்லூரியின் மீன்வளா்ப்புத் துறை தலைவா் பேராசிரியா் சா. ஆதித்தன் பயிற்சி அளித்தாா். தமிழகத்தைச் சோ்ந்த 5 பேரும், பிற மாநிலங்களைச் சோ்ந்த 6 பேரும் இணையவழியில் பங்கேற்றனா்.