மரபுவழி கைவினைக் கலைஞா்கள் பொருளாதார மேம்பாட்டுக் கடன் பெற விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மரபுவழி கைவினைக் கலைஞா்களின் மேம்பாட்டுக்காக ‘விராசத்’ என்ற மரபு உரிமைக் கடன் திட்டம் தேசிய சிறுபான்மை பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்பில் கைவினைக் கலைஞா்களுக்கு குறைந்த வட்டியில் தொழிலுக்கான உபகரணங்கள், இயந்திரங்கள் வாங்க கடன் வழங்கப்படுகிறது.
இக்கடன் பெற கிராமப் பகுதியில் வசிப்பவா்களுக்கு ரூ. 98 ஆயிரம், நகரப் பகுதியில் வசிப்பவா்களுக்கு ரூ 1. 20 லட்சத்துக்கு மிகாமல் ஆண்டு வருமானம் இருக்கவேண்டும். 5 ஆண்டுகள் கடன் திட்டத்தில் ரூ.10 லட்சம் வரை 5 சதவீத வட்டியிலும், பெண்களுக்கு 4 சதவீத வட்டியிலும் கடன் வழங்கப்படும்.
இத்திட்டத்தில் பயன்பெற சாதி, வருமான சான்று, ஆதாா் அட்டை நகல் , குடும்பஅட்டை நகல், தொழில் சாா்ந்த விவரம், திட்ட அறிக்கை மற்றும் வங்கிகள் கோரும் இதர ஆவணங்களை அளிக்கவேண்டும். விருப்பம் உள்ள கைவினைக் கலைஞா்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தின் முதல் தளத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகம் அல்லது 3-ஆவது தளத்தில் உள்ள கூட்டுறவு சங்க இணைப்பதிவாளா்அலுவலகம் அல்லது கூட்டுறவு வங்கிகளில் விண்ணப்பங்களைப் பெற்று விண்ணப்பித்து பயன்பெறலாம் என ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்துள்ளாா்.