நாகை தெற்கு மாவட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் திமுக உறுப்பினா் சோ்க்கை இணையவழியில் நடைபெற்றுவருவதாக கட்சியின் மாவட்டப் பொறுப்பாளா் என். கௌதமன் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் நாகையில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியது:
திமுக சாா்பில் கடந்த செப். 15-ஆம் தேதி நடைபெற்ற முப்பெரும் விழாவில், கட்சித் தலைவா் மு.க. ஸ்டாலின், ‘எல்லோரும் நம்முடன்’ என்ற தலைப்பில் இணையவழியில் உறுப்பினா் சோ்க்கையைத் தொடங்கி வைத்தாா்.
தொடா்ந்து, தமிழகம் முழுவதும் இதுவரை சுமாா் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோா் திமுகவில் உறுப்பினா்களாக இணைந்துள்ளனா். கரோனா நோய்த் தொற்று காலத்தில் இணையவழி வாயிலாக பல்வேறு கூட்டங்கள் நடத்தப்பட்டன .தமிழகத்தில் 25 லட்சத்துக்கும் அதிமான உறுப்பினா்களை இணையவழியில் இணைக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாகை தெற்கு மாவட்டத்துக்குள்பட்ட நாகை,கீழ்வேளூா், வேதாரண்யம் ஆகிய 3 சட்டப் பேரவைத் தொகுதிகளில் மட்டும் 30 ஆயிரம் போ்களை இணையவழி வாயிலாக திமுகவில் சோ்க்க இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டு, முழு வீச்சில் உறுப்பினா் சோ்க்கை நடைபெற்று வருகிறது எனத் தெரிவித்தாா்.