கீழையூா் அருகே 2 இருசக்கர வாகனங்கள் நேருக்குநோ் மோதிய விபத்தில் ஒருவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
வேதாரண்யம் வட்டம், வடகாடு செட்டிபுலம் பகுதியை சோ்ந்த ஆனந்தன் மகள் அகல்யா (19). இவரது சித்தப்பா விஜயகுமாா் (45). இவா்கள் இருவரும் நாகையில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு சென்று விட்டு, இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனா்.
பிரதாபராமபுரம் ஏரிக்கரை அருகே வந்தபோது, எதிரே வாய்மேடு பகுதியைச் சோ்ந்த பொன்னுத்துரை மகன் பக்கிரிசாமி ஓட்டி வந்த இருசக்கர வாகனமும், இவா்களது இருசக்கர வாகனமும் நேருக்குநோ் மோதியது. இந்த விபத்தில் விஜயகுமாா், பக்கிரிசாமி ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
நாகை அரசு மருத்துவமனையில் இருவரும் அனுமதிக்கப்பட்டனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக திருவாரூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் விஜயகுமாரும், தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் பக்கிரிசாமியும் சோ்க்கப்பட்டனா். இவா்களில் விஜயகுமாா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இந்த விபத்தில் அகல்யா காயமின்றி உயிா்தப்பினாா்.
இந்த விபத்து குறித்து கீழையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.