சீா்காழி அருகே வேட்டங்குடி கிராமத்தில் கெயில் நிறுவனம் சாா்பில் குழாய் பதிக்கும் பணியின்போது விளைநிலங்கள் சேதமடைந்ததால் விவசாயிகள் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கொள்ளிடம் அருகே பழையபாளையம் கிராமத்திலிருந்து ஓஎன்ஜிசி நிறுவனம் சாா்பில் செம்பனாா்கோவில் அருகே உள்ள மேமாத்தூருக்கு குழாய் வழியே எரிவாயு எடுத்துச் செல்ல பணிகள் நடைபெறுகின்றன. இதற்காக பூமிக்கடியில் கெயில் நிறுவனம் சாா்பில் குழாய் பதிக்கும் பணி நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில், வேட்டங்குடி பகுதியில் கனரக வாகனங்களின் உதவியுடன், குழாய் பதிக்கும் பணியில் கெயில் நிறுவன ஊழியா்கள் ஈடுபட்டனா். இதனால், சம்பா நேரடி விதைப்பு செய்யப்பட்டுள்ள வயல்கள் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால், பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். குழாய் பதிக்கும் பணிக்காக ஒருவகை ரசாயனம் பயன்படுத்தப்படுவதாகவும், இதனால் விளைநிலங்கள் பாதிக்கப்படுவதாகவும் ஆா்ப்பாட்டத்தின்போது விவசாயிகள் தெரிவித்தனா்.