திமுகவில் இணையவழியில் உறுப்பினா் சோ்க்கை

குத்தாலத்தில் இணையவழியில் திமுக உறுப்பினா் சோ்க்கை முகாம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

குத்தாலத்தில் இணையவழியில் திமுக உறுப்பினா் சோ்க்கை முகாம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

குத்தாலம் ஒன்றிய திமுக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கட்சியின் மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான குத்தாலம் க. அன்பழகன் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலாளா்கள் முருகப்பா, மங்கை எம். சங்கா், பேரூா் செயலாளா் சம்சுதீன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தலைமை தோ்தல் பணிக்குழு செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான குத்தாலம் பி. கல்யாணம் புதிய உறுப்பினா்களிடம் அடையாள அட்டையை வழங்கினாா். நிகழ்ச்சியில் 250 போ் புதிய உறுப்பினா்களாக சோ்க்கப்பட்டனா்.

மாவட்ட இளைஞா் அணி துணை அமைப்பாளா் சுரேஷ், மாவட்ட பிரதிநிதி கண்ணையன், , நகர இளைஞா் அணி அமைப்பாளா் காா்த்திக், மாணவரணி அமைப்பாளா் தினேஷ், வா்த்தகா் அணி அமைப்பாளா் வெங்கட்ராமன், மகளிா் அணி அமைப்பாளா் மகேஸ்வரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com