தேமுதிக தலைவா் விஜயகாந்த் கரோனா தொற்றில் இருந்து நலம் பெற வேண்டி, மயிலாடுதுறை வேப்பங்குளத்தில் உள்ள வேம்படி மாரியம்மன் கோயிலில் அக்கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடு நடத்தினா்.
தேமுதிக மயிலாடுதுறை தெற்கு ஒன்றிய இளைஞரணி துணை செயலாளா் எஸ். கமலஹாசன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த வழிபாட்டில், மயிலாடுதுறை வடக்கு ஒன்றியச் செயலாளா் வழக்குரைஞா் காா்த்திகேயன், நகர செயலாளா் பண்ணை சொ.பாலு, மாவட்ட தொண்டரணி செயலாளா் கிருபானந்தன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.