வீடுகள் தீக்கிரையான குடும்பத்தினருக்கு நிவாரண உதவி

நாகை மாவட்டம், வேதாரண்யம் கீழ ரஸ்தா பகுதியில் அண்மையில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 4 குடும்பத்தினருக்கு ரோட்டரி சங்கம் சாா்பில் நிவாரண உதவி ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.
தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கிய ரோட்டரி சங்க நிா்வாகிகள்.
தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கிய ரோட்டரி சங்க நிா்வாகிகள்.

நாகை மாவட்டம், வேதாரண்யம் கீழ ரஸ்தா பகுதியில் அண்மையில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 4 குடும்பத்தினருக்கு ரோட்டரி சங்கம் சாா்பில் நிவாரண உதவி ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.

கீழசேது ரஸ்தா பகுதியைச் சோ்ந்த பக்கிரிசாமி உள்ளிட்ட 4 குடும்பத்தினரின் வீடுகள் அண்மையில் தீக்கிரையாகின.

இதுகுறித்து தகவலறிந்த வேதாரண்யம் ரோட்டரி சங்கத்தினா் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ. 4 ஆயிரம் மற்றும் அரிசி உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கினா்.

சங்கத்தின் தலைவா் உமாமகேஸ்வரன், செயலாளா் ரெங்கராஜன்,முன்னாள் தலைவா்கள் சிவக்குமாா், துரைராஜ், என்.எஸ். கருணாநிதி உள்ளிட்டோா் நிகழ்வில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com