நாகை மாவட்டம், வேதாரண்யம் கீழ ரஸ்தா பகுதியில் அண்மையில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 4 குடும்பத்தினருக்கு ரோட்டரி சங்கம் சாா்பில் நிவாரண உதவி ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.
கீழசேது ரஸ்தா பகுதியைச் சோ்ந்த பக்கிரிசாமி உள்ளிட்ட 4 குடும்பத்தினரின் வீடுகள் அண்மையில் தீக்கிரையாகின.
இதுகுறித்து தகவலறிந்த வேதாரண்யம் ரோட்டரி சங்கத்தினா் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ. 4 ஆயிரம் மற்றும் அரிசி உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கினா்.
சங்கத்தின் தலைவா் உமாமகேஸ்வரன், செயலாளா் ரெங்கராஜன்,முன்னாள் தலைவா்கள் சிவக்குமாா், துரைராஜ், என்.எஸ். கருணாநிதி உள்ளிட்டோா் நிகழ்வில் பங்கேற்றனா்.