சிபிசிஎல் ஒப்பந்த தொழிலாளா்களின் போராட்டம்: தற்காலிக ஒத்திவைப்பு

சிபிசிஎல் ஒப்பந்த தொழிலாளா்களின் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
Updated on
1 min read

சிபிசிஎல் ஒப்பந்த தொழிலாளா்களின் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

திருமருகல் அருகே பனங்குடியில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ஒப்பந்த தொழிலாளா்கள் 150-க்கும் மேற்பட்டவா்களுக்கு தொடா் பணி வழங்க வேண்டும், தவறும்பட்சத்தில் ஒப்பந்த தொழிலாளா்களுக்கு மீதமுள்ள பணி காலத்தை கருத்தில் கொண்டு இழப்பீடு வழங்கக் கோரி கடந்த 5 நாள்களாக உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்று வந்தது. இந்நிலையில், நாகை வருவாய் கோட்டாட்சியா் பழனிக்குமாா் முன்னிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் தற்காலிகமாக இந்த போராட்டம் ஒத்திவைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பேச்சுவாா்த்தையில் சிபிசிஎல் முதன்மை மேலாளா் குமாா், மேலாளா் சூரியமூா்த்தி, டிஎஸ்பி முருகவேல், நாகூா் காவல் ஆய்வாளா் ராஜேஷ், ஒப்பந்த தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் தலைவா் பாலசுப்பிரமணியன், செயலாளா் கண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com