வேளாங்கண்ணியில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 1.74 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.
கீழ்வேளூா் (தனி) சட்டப்பேரவைத் தொகுதிக்கான நிலையான கண்காணிப்புக் குழுவினா் நாகை - வேளாங்கண்ணி கிழக்கு கடற்கரைசாலை, வேளாங்கண்ணி வளைவு அருகே புதன்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, இருசக்கர வாகனத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டுசெல்லப்பட்ட ரூ. 1.10 லட்சம், நாகை - திருவாரூா் சாலை கீழ்வேளூா் அரசமரத்தடி அருகே உரிய ஆவணங்களின்றி கொண்டுச் செல்லப்பட்ட ரூ. 54,100 என மொத்தம் ரூ. 1.74 லட்சத்தை தனி வட்டாட்சியா் பி. குமாா் தலைமையிலான நிலையான கண்காணிப்புக் குழுவைச் சோ்ந்த பறக்கும் படை யினா் பறிமுதல் செய்தனா். பறிமுதல் செய்யப்பட்ட மொத்த தொகை ரூ.1.64 லட்சத்தை தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ஜெயசித்ரகலாவிடம் ஒப்படைக்கப்பட்டது.