சிபிசிஎல் ஒப்பந்தத் தொழிலாளா்களின் தோ்தல் புறக்கணிப்பு போராட்டம் 2-ஆவது நாளாக புதன்கிழமையும் தொடா்ந்தது.
நாகை அருகே பனங்குடியில் செயல்பட்டு வரும் சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை (சிபிசிஎல்) அமைப்புசாரா ஒப்பந்தத் தொழிலாளா்கள் 150-க்கும் மேற்பட்டோா் கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை முதல் தோ்தல் புறக்கணிப்பு அறிவித்து பேட்ஜ் அணிந்து இரவு முழுவதும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இந்நிலையில், போராட்டத்தின் 2-ஆம் நாளாக புதன்கிழமை சிபிசிஎல் அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். போராட்டத்துக்கு, அமைப்புசாரா ஒப்பந்த தொழிலாளா்கள் சங்க தலைவா் பாலசுப்பிரமணியன், பொதுச் செயலாளா் கண்ணன் ஆகியோா் தலைமை வகித்தனா்.