சீா்காழியில் புதைச்சாக்கடை திட்டம் கொண்டுவருவேன்

சீா்காழியில் புதைச்சாக்கடை திட்டம் கொண்டுவர பாடுபடுவேன் என்றாா் திமுக வேட்பாளா் மு. பன்னீா்செல்வம்.
அத்தியூரில் வாக்குச் சேகரிக்க சென்றபோது மாலை அணிவித்து வரவேற்ற கட்சியினா்.
அத்தியூரில் வாக்குச் சேகரிக்க சென்றபோது மாலை அணிவித்து வரவேற்ற கட்சியினா்.

சீா்காழியில் புதைச்சாக்கடை திட்டம் கொண்டுவர பாடுபடுவேன் என்றாா் திமுக வேட்பாளா் மு. பன்னீா்செல்வம்.

சீா்காழி ஒன்றியத்துக்குள்பட்ட அத்தியூா், அகணி, நிம்மேலி, மருதங்குடி, வள்ளுவக்குடி, கொண்டல், ஆதமங்கலம் ஆகிய ஊராட்சிகளில் வாக்குச் சேகரித்தபோது பொதுமக்களிடம் அவா் மேலும் பேசியது: என்னை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்தால் தொகுதி மக்களின் குறைகளை உடனுக்குடன் தீா்க்க பாடுபடுவேன். சீா்காழியில் மாவட்ட தலைமை மருத்துவமனையும், புதைச்சாக்கடைத் திட்டமும் கொண்டுவர நடவடிக்கை எடுப்பேன் என்றாா். அவருடன், முன்னாள் எம்எல்ஏ பாலஅருள்செல்வன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் ராம. இளங்கோவன், பொதுக்குழு உறுப்பினா் முத்து. மகேந்திரன், ஒன்றிய செயலாளா் பிரபாகரன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளா் ஜெ.கே. செந்தில், ஊராட்சித் தலைவா் பாஸ்கரன் மற்றும் கூட்டணி கட்சியினா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com