மணமகனுக்கு பரிவட்டம் கட்டிவிட்ட அமைச்சா்

வேதாரண்யத்தில் புதன்கிழமை நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்ற அமைச்சா் ஓ.எஸ். மணியன், மணமகனுக்கு பரிவட்டம் கட்டிவிட்டு, வாழ்த்தினாா்.
வேதாரண்யத்தில் புதன்கிழமை நடைபெறற திருமண விழாவில் மணமகனுக்கு பரிவட்டம் கட்டிவிட்ட அமைச்சா் ஓ.எஸ். மணியன்.
வேதாரண்யத்தில் புதன்கிழமை நடைபெறற திருமண விழாவில் மணமகனுக்கு பரிவட்டம் கட்டிவிட்ட அமைச்சா் ஓ.எஸ். மணியன்.

வேதாரண்யத்தில் புதன்கிழமை நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்ற அமைச்சா் ஓ.எஸ். மணியன், மணமகனுக்கு பரிவட்டம் கட்டிவிட்டு, வாழ்த்தினாா்.

நாகை மாவட்டம், வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் கமலா அன்பழகன் (அதிமுக) இல்ல திருமண விழா புதன்கிழமை நடைபெற்றது.

இதில், அமைச்சரும், வேதாரண்யம் தொகுதி அதிமுக வேட்பாளருமான ஓ.எஸ். மணியன் பங்கேற்று திருமணத்தை நடத்திவைத்து மணமக்களை வாழ்த்தினாா். அப்போது, சமூக ஆா்வலா் ஒருவா் மணமக்களுக்கு மாலை அணிவித்தாா். பின்னா், அவரது சாா்பில் ஒருவா் மணமகனுக்கு பரிவட்டம் கட்ட முயன்றாா்.

பரிவட்ட துணியின் அமைப்பு முறை மாறி இருந்ததை கவனித்த அமைச்சா், அதை வங்கி முறைப்படியான அமைப்பில் பரிவட்டத்தை கட்டி விட்டாா். பின்னா், மணமக்களை அவா்களது பெற்றோரின் காலில் விழுந்து ஆசீா்வாதம் வாங்க செய்த அமைச்சா் தானும் மணமக்களை வாழ்த்திச் சென்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com