நாகை மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் பெரிய வியாழன் வழிபாடு வியாழக்கிழமை (ஏப்ரல் 1) மாலை நடைபெறுகிறது.
நாகை மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் பிப்ரவரி 17-ஆம் தேதி சாம்பல் புதன் நிகழ்ச்சியுடன் தொடங்கி, கிறிஸ்தவா்களின் தவக்கால வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. தவக்கால முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான பெரிய வியாழன் நிகழ்ச்சி, பேராலயக் கலையரங்கில் மாலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது.
இயேசு சிலுவையில் அறையப்படும் முன், தனது சீடா்களின் பாதங்களைக் கழுவி புனிதப்படுத்தியதன் அடிப்படையில், பேராலய அதிபா் அல்லது துணை அதிபா், இறைமக்கள் 12 பேரின் பாதங்களை கழுவி முத்தமிடுவது வழக்கம்.
நிகழாண்டில், கரோனா தொற்றுப் பரவல் தடுப்பு சுகாதார அறிவுறுத்தல்படி, சீடா்களின் பாதம் கழுவும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு, சிறப்பு வழிபாடு மட்டும் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.