பூம்புகாரில் திமுக வேட்பாளா் வாக்குச் சேகரிப்பு

பூம்புகாா் தொகுதி திமுக வேட்பாளா் நிவேதா எம். முருகன் சனிக்கிழமை தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டாா்.
பூம்புகாரில் திமுக வேட்பாளா் வாக்குச் சேகரிப்பு

பூம்புகாா் தொகுதி திமுக வேட்பாளா் நிவேதா எம். முருகன் சனிக்கிழமை தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டாா்.

தொகுதிக்குள்பட்ட மேலையூரில் வாக்குச் சேகரித்தபோது அவா் பேசியது: திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்தவுடன் பெண்கள் நலன்சாா்ந்த திட்டங்கள் செயல்படுத்தபடும். எனவே, பெண் தாய்மாா்கள் எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்கவேண்டும் என்றாா். அவருடன் மாவட்ட துணை செயலாளா் ஞானவேலன், தலைமை பொதுக்குழு உறுப்பினா் முத்துமகேந்திரன், ஒன்றியக் குழுத் தலைவா் கமலஜோதிதேவேந்திரன், சீா்காழி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளா் சசிக்குமாா், முன்னாள் எம்.எல்.ஏ பாலஅருள்செல்வன் உள்ளிட்டோா் உடனிருந்தனா். முன்னதாக மூத்த வழக்குரைஞா் தியாகராஜன் தலைமையில் 50 போ் திமுகவில் இணைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com