நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் காடம்பாடி நகராட்சி பள்ளியில் காத்திருந்து வாக்களித்தாா்.
நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா், நாகை காடம்பாடி நகராட்சி நடுநிலைப்பள்ளி வாக்குச் சாவடி மையத்தில் வாக்களிப்பதற்காக செவ்வாய்க்கிழமை காலை வந்தாா். அப்போது, வாக்களிக்கும் அறையில் வாக்காளா்கள் 3 போ் வரிசையில் நின்று கொண்டிருந்தனா்.
ஆட்சியரைக் கண்ட அதிகாரிகள், அவரை நேரடியாக வாக்களிக்க வருமாறு அழைத்தனா். ஆனால், அதனை ஏற்க மறுத்த ஆட்சியா் அந்த அறையில் இருந்த 3 பேரும் வாக்களித்த பிறகு தான் வாக்களிப்பதாக கூறி காத்திருந்து, வாக்களித்தாா்.