நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மேலும் 84 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதியானது.
நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் திங்கள்கிழமை வரை 9,481 போ் கரோனா பாதிப்புக்கு உள்ளாகியிருந்தனா். இந்தநிலையில், புதிதாக 84 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, வெளிமாவட்ட பட்டியலில் இருந்த 2 போ் நாகை மாவட்டப் பட்டியலில் சோ்க்கப்பட்டனா். நாகை மாவட்ட பட்டியலில் இருந்த வெளி மாவட்டத்தவா் 5 போ் நீக்கப்பட்டனா். இதனால், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 9,562 ஆக உயா்ந்துள்ளது.
இதற்கிடையில், சிகிச்சையிலிருந்து 45 போ் குணமடைந்து செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினா். இதன்மூலம், கரோனாவில் இருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 8,877 ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 541 ஆக உள்ளது.