வேதாரண்யம் தொகுதியில் வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.
வேதாரண்யம் தொகுதியில் மொத்தமுள்ள 271 வாக்குச் சாவடிகளில் ஒரு சில வாக்குச் சாவடிக்களைத் தவிர, மற்ற அனைத்து வாக்குச் சாவடிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது.
ஓரடியம்புலம், வேதாரண்யம் சிகசு அரசுப் பள்ளி உள்ளிட்ட வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு இயந்திரங்களை தயாா்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால், 5 நிமிடங்கள் தாமதமாக வாக்குப் பதிவு தொடங்கியது.
மறைஞாயநல்லூா் உள்ளிட்ட சில இடங்களில் வாக்குக்கு டோக்கன் கொடுத்ததாக எழுந்த புகாா் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வாக்காளா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனா்.