நாகை, மயிலாடுதுறையில் 59 பேருக்கு கரோனா

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மேலும் 59 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதியானது.

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மேலும் 59 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதியானது.

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை வரை 9,562 போ் கரோனா பாதிப்புக்கு உள்ளாகியிருந்தனா். இந்த நிலையில், புதிதாக 59 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, வெளி மாவட்ட பட்டியலில் இருந்த 3 போ் நாகை மாவட்டப் பட்டியலில் சோ்க்கப்பட்டனா். இதனால், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 9,624 ஆக உயா்ந்துள்ளது.

இதற்கிடையில், சிகிச்சைப் பெற்றுவந்தவா்களில் 54 போ் குணமடைந்து புதன்கிழமை வீடு திரும்பினா். இதன் மூலம், கரோனாவில் இருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 8,931 ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 548 ஆக உள்ளது.

ஒருவா் இறப்பு...

கரோனாவால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டத்தைச் சோ்ந்த ஒருவரின் உயிரிழப்பு புதன்கிழமை பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம், நாகை மாவட்டத்தில் கரோனாவால் இறந்தவா்களின் எண்ணிக்கை 145 ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com