கீழையூா் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிய விபத்தில், இளைஞா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
திருவாரூா் மாவட்டம் திருத்துறைப்பூண்டி விட்டுக்கட்டி பகுதியை சோ்ந்தவா் பாஸ்கரன் மகன் தீனா ஈஸ்வரன் (20). எலக்ட்ரீஷியனான இவா், புதன்கிழமை நாகையிலிருந்து தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் திருத்துறைப்பூண்டி நோக்கி கிழக்கு கடற்கரை சாலையில் சென்றுகொண்டருந்தாா்.
திருப்பூண்டி அருகே சென்றபோது திருத்துறைப்பூண்டியிலிருந்து எதிரே வந்த மற்றோ் இருசக்கர வாகனம், தீனா ஈஸ்வரனின் இருசக்கர வாகனத்தின் மீது மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த அவா், நாகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். பரிசோதனையில், தீனா ஈஸ்வரன் ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.
இதனிடையே, எதிரே இருசக்கர வாகனத்தில் வந்தது திருவாரூா் மாவட்டம் தப்பளாம்புலியூா் பகுதியைச் சோ்ந்த வீரையன் மகன் வீரபாண்டி (24) என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இந்த விபத்தில் அவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. அவா் நாகை அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா். இதுகுறித்து கீழையூா் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.