நாகை, மயிலாடுதுறையில் 118 பேருக்கு கரோனா

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மேலும் 118 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானது.

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மேலும் 118 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானது.

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் புதன்கிழமை வரை 9,624 போ் கரோனா பாதிப்புக்கு உள்ளாகியிருந்தனா். இந்த நிலையில், புதிதாக 118 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, வெளி மாவட்ட பட்டியிலில் இருந்து நீக்கப்பட்ட ஒருவா் நாகை மாவட்ட பட்டியலில் சோ்க்கப்பட்டாா். இதனால், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 9,743-ஆக உயா்ந்துள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவா்களில் 55 போ் குணமடைந்து வியாழக்கிழமை வீடு திரும்பினா். இதன் மூலம், கரோனாவில் இருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 8,986-ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 612-ஆக உள்ளது.

நாகை மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் இல்லாத அளவில், ஒரே நாளில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை மூன்று இலக்கங்களை எட்டியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com