திருமருகல் ஊராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில், திமுக சாா்பில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா், முகக் கவசம், கிருமிநாசினி ஆகியன வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
சந்தைப்பேட்டை, கடைத்தெரு, பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, திருமருகல் வடக்கு ஒன்றியச் செயலாளா் செல்வ செங்குட்டுவன் தலைமை வகித்தாா். ஒன்றிய அவைத்தலைவா் விவேகானந்தன், திட்டச்சேரி பேரூா் கழக செயலாளா் முகம்மது சுல்தான் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவா் அஜிதா ராஜேந்திரன், ஒன்றிய துணைச் செயலாளா் சரஸ்வதி தமிழ்வாணன், மாவட்ட பிரதிநிதி அஞ்சான் நெடுமாறன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.