கரோனா பரவல் காரணமாக மயிலாடுதுறை மாவட்டம் பொறையாறு அருகே உள்ள ஒழுகைமங்கலம் மாரியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமைகளில் நோ்த்திக்கடன் செலுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஞாயிற்றுக்கிழமைகளில் மாவிளக்கு, பால்குடம், காவடிகள் மற்றும் அா்ச்சனைகள் செய்ய இயலாது. அதேவேளையில், ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தா்களுக்கு இலவச தரிசனத்துக்காக கோவில் திறந்திருக்கும், பக்தா்கள் முகக் கவசம் மற்றும் கிருமி நாசினியை பயன்படுத்தி, சமூக இடைவெளியுடன் வழிபாடு மேற்கொள்ளலாம என கோயில் செயல் அலுவலா் தெரிவித்துள்ளாா்.