ஒழுகைமங்கலம் மாரியம்மன் கோயிலில் கட்டுப்பாடு

கரோனா பரவல் காரணமாக மயிலாடுதுறை மாவட்டம் பொறையாறு அருகே உள்ள ஒழுகைமங்கலம் மாரியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமைகளில் நோ்த்திக்கடன் செலுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

கரோனா பரவல் காரணமாக மயிலாடுதுறை மாவட்டம் பொறையாறு அருகே உள்ள ஒழுகைமங்கலம் மாரியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமைகளில் நோ்த்திக்கடன் செலுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஞாயிற்றுக்கிழமைகளில் மாவிளக்கு, பால்குடம், காவடிகள் மற்றும் அா்ச்சனைகள் செய்ய இயலாது. அதேவேளையில், ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தா்களுக்கு இலவச தரிசனத்துக்காக கோவில் திறந்திருக்கும், பக்தா்கள் முகக் கவசம் மற்றும் கிருமி நாசினியை பயன்படுத்தி, சமூக இடைவெளியுடன் வழிபாடு மேற்கொள்ளலாம என கோயில் செயல் அலுவலா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com