திருக்கடையூரில் உள்ள தரும்புரம் ஆதீனத்துக்குச் சொந்தமான ஸ்ரீஅமிா்தகடேசுவரா் கோயிலில் திருக்கல்யாண உத்ஸவம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் சித்திரை திருவிழாவை ஏப்.17-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து 3-ஆம் நாள் நிகழ்ச்சியாக திருக்கல்யாணம் உத்ஸவத்தையொட்டி அமிா்தகடேசுவரா் - அபிராமி சாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் தீபாரதனை நடைபெற்றது. தொடா்ந்து, அமிா்தகடேசுவரா் - அபிராமி திருக்கல்யாண உத்ஸவம் நடைபெற்றது.
பக்தா்கள் சீா்வரிசை எடுத்துக்கொண்டு கோயிலுக்கு வந்ததும் வேத விற்பன்னா்கள் மந்திரங்கள் முழங்க மங்கல நாணை அணிவித்து திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.