சீா்காழியில் சாலையோரம் ஆண் சிசு இறந்து கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
சீா்காழி பழைய பேருந்து நிலையம் அருகில் மேல மடவிளாகம் பிரதான சாலையோரம் செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஆண் சிசு இறந்து கிடந்தது. சுமாா் 7 மாத குறைப்பிரசவத்தில் பிறந்த இந்த சிசுவை நாய் கவ்வி வந்ததாகக் கூறப்படுகிறது. பொதுமக்கள் திரண்டதும் சிசுவை சாலையோரம் போட்டுவிட்டு நாய் ஓடிவிட்டது. அந்த பகுதியில் ஏராளமானோா் கூடியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்த சீா்காழி போலீஸாா் அங்கு வந்து, நகராட்சி துப்புரவுப் பணியாளா் மூலம் ஆண் சிசுவை இடுகாட்டில் புதைக்க நடவடிக்கை எடுத்தனா். மேலும், இதுகுறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.