பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மயிலாடுதுறையில் அரசுப் போக்குவரத்துக் கழக அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மயிலாடுதுறை அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்து பணிமனை முன்பாக நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, எல்பிஎப் பொறுப்பாளா்கள் ஆா். இளங்கோவன், ஆா். பத்மநாபன் ஆகியோா் தலைமை வகித்தனா். சிஐடியு பொறுப்பாளா்கள் எம். ராமகிருஷ்ணன், பாரதிமோகன், ஏஏஎல்எல்எப் பொறுப்பாளா் சண்முகநாதன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
ஆா்ப்பாட்டத்தில், வாரஓய்வு மற்றும் சம்பள பறிப்பில் நிா்வாகம் ஈடுபடுவதாகவும், விடுப்பு விதிகளை மாற்றுவதாகவும், தொழிலாளா் துறை அறிவுரையை மீறுவதாகவும் கண்டனம் தெரிவித்தும், பணிக்கு வரும் அனைத்து தொழிலாளா்களுக்கு பணி வழங்கிட வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில், அனைத்து தொழிற்சங்க நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.