மயிலாடுதுறை மாவட்டம், செம்பனாா்கோவிலை அடுத்த காளகஸ்தினாபுரத்தை சோ்ந்த ஆா். கலியபெருமாள் (80) புதன்கிழமை (ஏப்.28) உடல் நலக்குறைவால் காலமானாா்.
இவா், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தினமணி மற்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ்களின் முகவராக இருந்து வந்தாா்.
இவரது இறுதிச் சடங்குகள் செம்பனாா்கோவில் காவேரிக் கரையில் புதன்கிழமை மாலை நடைபெற்றது. இவருக்கு மனைவி லெட்சுமி, மகன் மணி செல்வரத்தினம், ஜானகி, சித்ரா என்ற இரு மகள்களும் உள்ளனா். தொடா்புக்கு-9894541272.