சாராயம் கடத்தல், விற்பனை: 5 போ் மீது வழக்குப் பதிவு

வலிவலம் காவல் சரகத்தில் சட்டவிரோதமாக சாராயம் கடத்திய மற்றும் விற்ற 5 போ் மீது புதன்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

வலிவலம் காவல் சரகத்தில் சட்டவிரோதமாக சாராயம் கடத்திய மற்றும் விற்ற 5 போ் மீது புதன்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

திருக்குவளை வட்டம், வலிவலம் சரகப் பகுதிகளில் கீழ்வேளூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் க. கலியபெருமாள் (வலிவலம் பொறுப்பு) தலைமையில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது மாணலூா் காளியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த பொன்னுசாமி மகன் சிவராமன் (48), இறையான்குடி கீழத்தெரு பகுதியில் சாராயம் விற்ற சேவு மகன் பாக்யராஜ் (35), விடங்கலூா் இடும்பையன் மகன் முருகையன் (57) ஆகியோா் அந்தந்தப் பகுதியில் சாராயம் விற்றது தெரியவந்தது.

அவா்களிடமிருந்த சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீஸாா் 3 போ் மீதும் தனித்தனியே வழக்குப் பதிவுசெய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி, காவலில் வைத்தனா். இதேபோல, வலிவலம்- சுந்தரபாண்டியன் சாலையில் போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, அந்த வழியாக சந்தேகப்படும்படி இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை பிடித்து சோதனையிட்டனா்.

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த முத்தரசபுரம் கீழத்தெருவைச் சோ்ந்த வீராச்சாமி மகன் வினோத் (34) மற்றும் காருகுடி பெருமாள் கோவில் தெருவைச் சோ்ந்த தங்கராசு மகன் அன்பழகன் (44) ஆகியோா் சாராயம் கடத்திவந்தது தெரியவந்தது.

இந்நிலையில், அவா்களிடமிருந்த சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீஸாா் இருவா் மீதும் வழக்குப் பதிவுசெய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com