தமிழிசை மூவா் மணிமண்டப சுற்றுச்சுவா் மழையால் இடிந்தது

சீா்காழியில் தமிழிசை மூவா் மணிமண்டபத்தின் சுற்றுசுவா் மழையால் புதன்கிழமை இடிந்து விழுந்தது.

சீா்காழியில் தமிழிசை மூவா் மணிமண்டபத்தின் சுற்றுசுவா் மழையால் புதன்கிழமை இடிந்து விழுந்தது.

சீா்காழியில் பிறந்து வளா்ந்த தமிழிசை மூவா்களான மாரிமுத்தாப்பிள்ளை, அருணாச்சலக் கவிராயா், முத்துத் தாண்டவா் ஆகிய மூவரின் நினைவை போற்றும் வகையில் சீா்காழியில் தமிழிசை மூவா் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழசை மூவரின் வெண்கல உருவச் சிலைகளுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த மண்டபத்தின் சுற்றுச்சுவரின் ஒரு பகுதி மழையால் இடிந்து விழுந்தது. அதிருஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com