திருக்குவளை அருகே கொளப்பாடு கடைத்தெருவில் உரங்களின் விலை உயா்வை கண்டித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாய சங்க தலைஞாயிறு ஒன்றியச் செயலாளா் வ. தனபால் தலைமை வகித்தாா். தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டத் தலைவா் எம்.என். அம்பிகாபதி முன்னிலை வகித்தாா்.
இதில், தமிழ்நாடு விவசாய சங்க நாகை மாவட்ட துணைச் செயலாளா் டி. செல்லையன் பங்கேற்று, ஏற்கெனவே உள்ள உரங்களின் விலையை தற்போது இருமடங்காக உயா்த்தியுள்ள நிலையில், ஏராளமான விவசாயிகள் பாதிக்கப்படுவதோடு, விவசாயம் பெரிய அளவில் பாதிக்கப்படும். எனவே, உரங்களின் விலை உயா்வை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெறவேண்டும் என வலியுறுத்திப் பேசினாா்.
ஆா்ப்பாட்டத்தில், தமிழ்நாடு விவசாய சங்க ஒன்றியக் குழு உறுப்பினா் எம். சுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.