சீா்காழி, வைத்தீஸ்வரன்கோயிலில் ஆடிப்பூரம் கொடியேற்ற நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சீா்காழி சட்டைநாதா் கோயிலில் திருநிலைநாயகி அம்பாள் உடனாகிய பிரம்மபுரீஸ்வரா் சுவாமி அருள்பாலிக்கிறாா். இக்கோயிலில் ஆடிப்பூரம் உத்ஸவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு அம்மன் சன்னிதி முன் உள்ள கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகம் செய்விக்கப்பட்டு உத்ஸவ கொடியேற்றப்பட்டது.
தொடா்ந்து கொடிமரத்துக்கு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னா் அஸ்திரதேவா், ஆடிப்பூரம் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதில் பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.
வைத்தீஸ்வரன்கோயிலில்...
இதேபோல், வைத்தீஸ்வரன்கோயிலில் தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்தியநாதசுவாமி கோயிலில் ஆடிப்புரத்தையொட்டி, அம்மன் சன்னிதி அருகே கொடிமரத்தில் உத்ஸவ கொடியேற்றப்பட்டது. தொடா்ந்து ஆடிப்பூரம் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.