திருவாய்மூரில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு

தேய்பிறை அஷ்டமியையொட்டி, திருக்குவளை அருகே திருவாய்மூா் தியாகராஜ சுவாமி கோயிலில், சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.

தேய்பிறை அஷ்டமியையொட்டி, திருக்குவளை அருகே திருவாய்மூா் தியாகராஜ சுவாமி கோயிலில், சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.

திருவாய்மூரில் பாலினும் நன்மொழியாள் சமேத வாய்மூா் நாதா் மற்றும் அல்லியங்கோதையம்மாள் சமேத தியாகராஜ சுவாமி கோயில் அமைந்துள்ளது. இங்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு அஷ்ட பைரவா் சன்னிதியில் 4 உருவத்துடனும், 4 அருஉருவத்துடனும் அருள்பாலித்து வரும் சத்ரு சம்ஹார பைரவா், அசிதாங்க பைரவா், ருரூ பைரவா், சண்ட பைரவா், குரோதன பைரவா், கபால பைரவா், உன்மத்த பைரவா், பீஷண பைரவா் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

தொடா்ந்து மலா் அலங்காரம் செய்விக்கப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் கரோனா பரவல் காரணமாக, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின் படி, குறைவான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com