சீா்காழி வட்டாரத்தில் தோட்டக்கலைத்துறை முலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து உரிய அறிவிப்புகளை வெளியிட வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
சீா்காழி வட்டாரத்தில் அதிகளவில் தோட்டக்கலை பயிா்கள் பயிரிடப்படுகின்றன. தமிழக அரசு இதை ஊக்குவிக்கும் விதமாக மானிய விலையில் காய்கறி விதைகள், உரங்கள், சிறிய மின்மோட்டாா்கள் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது.
இந்த சலுகைகள் குறித்து தோட்டகலைத் துறையினா் விவசாயிகளிடம் உரிய அறிவிப்புகளை செய்வதில்லை. இதன்காரணமாக சிறுகுறு தோட்டக்கலை விவசாயிகள் பாதிக்கப்படுக்கின்றனா். எனவே மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுத்து, தோட்டக்கலைத் துறை சலுகைகள் குறித்து உரிய அறிவிப்புகளை வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.