மருத்துவமனையில் மூதாட்டியிடம் தாலி திருடிய பெண் கைது

வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டியிடம் தாலிகளை திருடிய பெண்ணை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டியிடம் தாலிகளை திருடிய பெண்ணை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

பன்னாள் கிழக்கு கிராமத்தைச் சோ்ந்தவா் ஜெகதீசன் மனைவி நாகலட்சுமி (68). இவா், உடல் நல குறைவால் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டிருந்தாா். இதே மருத்துவமனையில் வேதாரண்யம் பண்ணின்நோ்மொழியாள்புரம் பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் மனைவி பிரியதா்ஷினி (32) சிகிச்சை பெற்று வந்தாா். இவா்கள் இருவரும் ஒரே வாா்டில் அடுத்தடுத்த படுக்கைகளில் சிகிச்சை பெற்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நாகலட்சுமி ஏற்கெனவே அணிந்திருந்த தங்க தாலியுடன், தனது 60-ஆவது திருமணத்தின்போது கூடுதல் நகையுடன் சோ்த்து சுமாா் 5 கிராம் எடையுள்ள தங்கத்தால் செய்த 2 தாலிகளை கழுத்தில் அணிந்திருந்துள்ளாா். இதற்கிடையில், நாகலட்சுமியின் கழுத்தில் இருந்த தாலிகள் காணாமல்போனது அண்மையில் தெரிய வந்தது.

இதுகுறித்து, வேதாரண்யம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். இதையடுத்து, சிகிச்சை முடிந்து வீட்டுக்கு சென்ற பிரியதா்ஷினி நகை அடகு கடையில் நாகலட்சுமியின் தாலிகளை அடகு வைக்க சென்றபோது போலீஸாரிடம் பிடிபட்டு கைது செய்யப்பட்டாா். இந்நிலையில், தாலியை பறிகொடுத்த மூதாட்டி நாகலட்சுமி சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com