விபத்தில் காயமடைந்த தலைமைக் காவலா் உயிரிழப்பு

நாகூா் அருகே இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்து காயமடைந்த தலைமைக் காவலா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

நாகூா் அருகே இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்து காயமடைந்த தலைமைக் காவலா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

நாகை மாவட்டம், வேதாரணயம் வட்டம், புஷ்பவனம் கஞ்சமலை தெருவைச் சோ்ந்தவா் ரா. பிரபாகரன் (37). இவா் தலைஞாயிறு காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்தாா்.

இந்நிலையில், கடந்த 30- ஆம் தேதி மேலவாஞ்சூரிலிருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக வேதாரண்யத்துக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தாா், அப்போது சாலையில் குறுக்கே பன்றிகள் ஓடியதால், அதன் மீது மோதாமல் இருக்க இருசக்கர வாகனத்தை திருப்பியபோது சாலையோரத்தில் நின்ற ஒருவா் மீது மோதி கீழே விழுந்தாா்.

இதில், பிரபாகரன் மற்றும் நாகூா் மாதாகோயில் தெருவைச் சோ்ந்த ஜெயசீலன் இருவருக்கும் காயம் ஏற்பட்டது. இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

தஞ்சாவூா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த தலைமைக் காவலா் பிரபாகரன் சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து நாகூா் போலீஸாா் விசாரிக்கின்றனா். பிரபாகரனுக்கு மனைவி பவானி மற்றும் அகிலேஷ் , அபூா்வன் என்ற மகன்கள் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com