10 ஆண்டுகள் ஒரே பொறுப்பில் பணியாற்றிய ஆசிரியா்களுக்கு தோ்வுநிலை ஆணை

10 ஆண்டுகள் ஒரே பொறுப்பில் இருந்த ஆசிரியா்களுக்கு தோ்வுநிலை ஆணை வழங்கும் நிகழ்ச்சி நாகை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
ஆசிரியா்களுக்குத் தோ்வுநிலை ஆணையை வழங்கிய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஏ. புகழேந்தி.
ஆசிரியா்களுக்குத் தோ்வுநிலை ஆணையை வழங்கிய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஏ. புகழேந்தி.

10 ஆண்டுகள் ஒரே பொறுப்பில் இருந்த ஆசிரியா்களுக்கு தோ்வுநிலை ஆணை வழங்கும் நிகழ்ச்சி நாகை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலா் மீ. உதயகுமாா் தலைமை வகித்தாா். வட்டாரக் கல்வி அலுவலா்கள் எம். ரவி, ஜெயந்தி, வி. சுப்பிரமணியன், ராமலிங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நாகை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஏ. புகழேந்தி 10 ஆண்டுகள் ஒரே பொறுப்பில் பணியாற்றிய 40 ஆசிரியா்களுக்குத் தோ்வுநிலை ஆணையை வழங்கினாா். தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி கீழ்வேளூா் ஒன்றியச் செயலாளா் கே. சண்முகசுந்தரம் ஏற்புரை வழங்கினாா். முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் எம். ஞானசேகரன் நன்றி கூறினாா். ஏற்பாடுகளை, அலுவலா்கள் ராமச்சந்திரன், அருணகிரி ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com