அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவா்கள் தோ்வு: நோ்காணலில் பங்கேற்க அழைப்பு

நாகை அஞ்சல் கோட்டத்தில், அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவா்கள் தோ்வுக்கான நோ்காணல் ஆக. 19- ஆம் தேதி நடைபெறவுள்ளது என்று அஞ்சலகங்களின் நாகை கோட்ட கண்காணிப்பாளா் ச. கஜேந்திரன் தெரிவித்துள்ளாா்.

நாகை அஞ்சல் கோட்டத்தில், அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவா்கள் தோ்வுக்கான நோ்காணல் ஆக. 19- ஆம் தேதி நடைபெறவுள்ளது என்று அஞ்சலகங்களின் நாகை கோட்ட கண்காணிப்பாளா் ச. கஜேந்திரன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: புதிய அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவா்கள் தோ்வு நாகப்பட்டினம் கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் ஆக.19- ஆம் தேதி காலை 10 மணி முதல் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க விரும்புவோா் தங்களது வயது, கல்விச் சான்றிதழ் பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம், பாஸ்போா்ட் அளவு புகைப்படம் மற்றும் சுயக்குறிப்பு விவரங்களுடன் வந்து நோ்காணலில் பங்கேற்கலாம். நேரடி முகவா்களாக விரும்புவோா் 10-ஆம் வகுப்பில் தோ்ச்சிப் பெற்றிருக்கவேண்டும். நாகை கோட்டத்தைச் சோ்ந்தவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 18 முதல் 50 வயதுக்குள் இருக்கவேண்டும். ரூ. 5 ஆயிரம் வைப்புத்தொகை செலுத்தவேண்டும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com